skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள்
- பால் : 1/2 ஆழாக்கு
- வெண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்
- வெனிலா எசன்ஸ் : 4 துளிகள்
- சர்க்கரை : 200 கிராம்
- பாதாம் பருப்பு : 40 கிராம்
- முந்திரிப் பருப்பு :40 கிராம்
- தேங்காய் துருவல் : 40 கிராம்
செய்முறை
- பாதாம் பருப்பைச் சற்று சூடான தண்ணீரில் நனைத்து வைத்து தோலை அகற்றவும்.
- முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, தேங்காய் துருவல் மூன்றையும் வெண்ணைப் போல் அரைக்கவும்.
- அரைத்த விழுதைப் பாலில் கலந்து சர்க்கரையைச் சேர்த்து ஒரு வாணலியில் விட்டு நிதானமாய் எரியக்கூடிய அடுப்பில் வைத்து அடிக்கடி கிளறவும்.
- பர்பி பக்குவம் சற்று கெட்டியானப்பின், எசன்ஸ், வெண்ணெய் இரண்டையும் சேர்த்துப் பாத்திரதில் பிடிக்காமல் கிளறி, பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல், பூத்து வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கவும்
- பிறகு நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிச் சமமாய் பரத்திச் சூடு ஆறினபின் சற்றுக் கனமாய்த் துண்டுகள் செய்யவும்.