skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள்
- பால் : 1/2 ஆழாக்கு
- வெண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்
- வெனிலா எசன்ஸ் : 4 துளிகள்
- சர்க்கரை : 200 கிராம்
- பாதாம் பருப்பு : 40 கிராம்
- முந்திரிப் பருப்பு :40 கிராம்
- தேங்காய் துருவல் : 40 கிராம்
செய்முறை
- பாதாம் பருப்பைச் சற்று சூடான தண்ணீரில் நனைத்து வைத்து தோலை அகற்றவும்.
- முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, தேங்காய் துருவல் மூன்றையும் வெண்ணைப் போல் அரைக்கவும்.
- அரைத்த விழுதைப் பாலில் கலந்து சர்க்கரையைச் சேர்த்து ஒரு வாணலியில் விட்டு நிதானமாய் எரியக்கூடிய அடுப்பில் வைத்து அடிக்கடி கிளறவும்.
- பர்பி பக்குவம் சற்று கெட்டியானப்பின், எசன்ஸ், வெண்ணெய் இரண்டையும் சேர்த்துப் பாத்திரதில் பிடிக்காமல் கிளறி, பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல், பூத்து வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கவும்
- பிறகு நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிச் சமமாய் பரத்திச் சூடு ஆறினபின் சற்றுக் கனமாய்த் துண்டுகள் செய்யவும்.
தேவையானப் பொருட்கள்
- இனிப்புள்ள மாம்பழம் : 1
- பால் : 200 மி.லி
- சர்க்கரை : 200 கிராம்
- முந்திரிப் பருப்பு : 6
- திராட்சை : 2 டேபிள் ஸ்பூன்
- குங்குமப்பூ : சிறிதளவு
செய்முறை
- மாம்பழத்தை அலம்பி, ஆவியில் வேகவைக்கவும்.
- சூடு ஆறின பின்பு தோல், கொட்டை ஆகியவற்றை அகற்றி, சர்க்கரையைச் சேர்த்து பாத்திரத்தில் போட்டுக் கரி அடுப்பில் வைத்து, அடிப் பிடிக்காமல் கிளறவும்.
- முந்திரிப் பருப்பைச் சிறிய துண்டுகள் செய்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- குங்குமப்பூவை மாம்பழத்துடன் சேர்க்கவும்.
- திராட்சைப் பழத்தை அலம்பிக் கரண்டியினால் மசித்துப் பாலில் கலந்து கொள்ளவும்
- பாயசம் சற்றுக் கெட்டியானவுடன் தீயிலிருந்து இறக்கி விடவும்.
- பாலைக் காய்ச்சிச் சூடு ஆறின பிறகு, பாயசத்தில் சேர்த்து உபயோகப்படுத்தவும்
- வறுத்த முந்திரிப் பருப்பையும் பாயசத்தில் சேர்க்கவும்.
- சுவையான மாம்பழப் பாயசம் தயார்.
தேவையான பொருட்கள்
- அரிசி : 100 கிராம்
- கடலைப் பருப்பு : 150 கிராம்
- தூள் செய்த வெல்லம் : 250 கிராம்
- தேங்காய் :1/4 முடி
- பால் : 1/4 லிட்டர்
- ஏலக்காய் : 3
- நெய் : 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- ஆரிசி, கடலைப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் போட்டுக் களைந்து , தண்ணீர் வடித்த பின் நிழலில் உலர்த்தவும்
- தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்
- வாணலியில் சிறிது நெய் விட்டு நிதானமாய் எரியக்க் கூடிய அடுப்பில் வைத்து நெய் காய்ந்தபின் முதலில் தேங்காய்த் துருவலைப் பொன் நிறமாய் வறுத்துக் கொண்டு அரிசி, பருப்பைச் சற்று வருது எடுக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும்.
- களிம்பேறாத பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கும் பொழுது, அரிசி பருப்பைப் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
- பின்பு வெல்லத்தூளைச் சேர்த்து கொதித்தபின், பால், ஏலப்பொடி, வறுத்த தேங்காய் துருவல் முதலியவற்றைப் பாத்திரத்தில் சேர்த்து உபயோகப்படுத்தவும்.