-
புழுங்கல் அரிசி, பச்சை அரிச இரண்டையும் சேர்த்து ஊறவைத்து அத்துடன் இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும்.
முக்கால் பதம் வந்ததும் தக்காளியை நறுக்கி மாவுடன் கலந்து அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை கடுகு, உளுந்து கடலைப் பருப்புடன் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டுத் தாளித்து மாவுடன் கலந்து கொள்ளவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, தயிர் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தோசையாக வார்க்கவும். மெல்லிய தோசையாக வார்த்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவந்தவுடன் திருப்பவும.
அரைத்தவுடன் உடனே செய்து சுவையாக திடீர் விருந்தினர்களுக்கு கொடுத்து மகிழ சுவையான தக்காளி தோசை ரெடி.