Thursday, 1 April 2010

தக்காளி தோசை - Tomato Dosai (in Tamil)

தேவையான பொருட்கள்

  1. புழுங்கல் அரிசி : 1/2  கிலோ
  2. பச்சரிசி : 100 கிராம் 
  3. மிளகாய் வற்றல் : காரத்திற்கேற்ப 
  4. சிறிய வெங்காயம் : 1/4 கிலோ 
  5. பச்சை மிளகாய் : 5 
  6. இஞ்சி : ஒரு சிறிய துண்டு 
  7. பூண்டு : 15 பற்கள்
  8. தக்காளிப் பழம் : 1/2 கிலோ 
  9. கருவேப்பிலை : சிறிதளவு 
  10. கொத்தமல்லி : சிறிதளவு 
  11. உப்பு : தேவைக்கேற்ப 
  12. கெட்டி தயிர் : 1/2 லிட்டர்
  13. பெரிய வெங்காயம் : 1/4 கிலோ 
  14. கடுகு : ஒரு ஸ்பூன் (தாளிக்க)
  15. கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு : தலா ஒரு ஸ்பூன் (தாளிக்க) 
  16. எண்ணெய் : 1/4 லிட்டர் 
செய்முறை
  • புழுங்கல் அரிசி, பச்சை அரிச இரண்டையும் சேர்த்து ஊறவைத்து அத்துடன் இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும். 
  •  
  • முக்கால் பதம் வந்ததும் தக்காளியை நறுக்கி மாவுடன் கலந்து அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  •  
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை கடுகு, உளுந்து கடலைப் பருப்புடன் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டுத் தாளித்து மாவுடன் கலந்து கொள்ளவும்.
  •  
  • பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, தயிர் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  •  
  • எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தோசையாக வார்க்கவும். மெல்லிய தோசையாக வார்த்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவந்தவுடன் திருப்பவும.
  •  
  • அரைத்தவுடன் உடனே செய்து சுவையாக திடீர் விருந்தினர்களுக்கு கொடுத்து மகிழ சுவையான தக்காளி தோசை ரெடி.
  •  

    பாதாம் அல்வா (Baadam Halwa)

    தேவையான பொருட்கள் :

    1. பாதாம் பருப்பு : 700 கிராம் 
    2. சக்கரை              :   300 கிராம்
    3. நெய்                    :    175 கிராம்
    4. குங்குமப்பூ       :  சிறிதளவு

    செய்முறை

    • பாதாம் பருப்பைச் சற்று சூடான தண்ணீரில் போட்டுத் தோலை அகற்றவும்.
    • சிறிது பாலைத் தெளித்துப் பருப்பை மசிய அரைக்கவும்.
    • குங்குமப்பூவைச் சிறிது பாலில் நனைத்து வைக்கவும்.
    • களிம்பேறாத ஒரு பாத்திரத்தில் முக்கால் ஆழாக்குத் தண்ணீர் விட்டுச் சக்கரையைப் போட்டு நிதானமாய் எரியக்கூடிய அடுப்பில் வைக்கவும்.
    • கம்பிப்பாகு ஆனவுடன் பாதாம் விழுதைச் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் கிளறவும் .
    • அல்வா லேகியப்பதம் ஆனப்பின், நெய், குங்குமப்பூ  இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
    • மிகவும் கெட்டியாய்க் கிளறினால் அல்வா பர்பி ஆகிவிடும். மற்ற அல்வா வகைகளைப் போல் துண்டு செய்யாமல் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  தேவையான பொழுது அல்வாவைச் சிறிது சூடாக்கி உபயோகப்படுத்தவும்.